வலைபாயுதே

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரி..

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரிலே காட்சிய..

வாயில் பூவுடன் நயினாதீவு கோவில் உள்ளே இர..

வாயில் பூவுடன் நயினாதீவு கோவில் உள்ளே இருந்து வந்த..

நடனத்தில் உலக சாதனை படைத்த பெண்கள் | இலங..

நடனத்தில் உலக சாதனை படைத்த பெண்கள் | இலங்கையில் உள..

லைப்ஸ்டைல்

கருப்பான சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப..

என்ன தான் கோடைக்காலம் முடிவுக்கு வந்தாலும், இன்னும் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாளுக்கு வெயில் சுட்டெரித்துக் கொண்டு தான் உள்ளது. இப்படி வெயில் கொளுத்துவதால், சருமம் மோசமாக பாதிக்கப்பட்டு, பலர் அடையாளம் தெரியாத வகையில் கருமையாக மாறி உள்ளனர். உங்களின் சருமமும் வெயிலால் கருப்பாக மாறியுள்ளதா? உங்கள் சருமத்தில் உள்ள கருமையைப் போக்க வேண்டுமா? இதற்காக கடைகளில் விற்கப்படும் விலையுயர்ந்த பல பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகிறீர்களா? இருந்தாலும் எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லையா? அப்படியானால் நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்டு வாருங்கள். அதுவும் நம் வீட்டில் உள்ள உருளைக்கிழங்கைக் கொண்டு ஃபேஸ் மாஸ்க் போடும் போது, அதில் உள்ள அசிட்டிக் தன்மையால், சருமத்தில் உள்ள கருமை மங்கி, சரும நிறம் அதிகரிப்பதைக் காணலாம். இப்போது சருமத்தை வெள்ளையாக்க உதவும் சில உருளைக்கிழங்கு ஃபேஸ் மாஸ்க்குகள் குறித்து காண்போம். ஃபேஸ் மாஸ்க் #1 * இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 3 டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு சாற்றினை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். * பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். * அதன்பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். * இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வர ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். ஃபேஸ் மாஸ்க் #2 * இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 2 டீஸ்பூன் உருளைக்கிழங்கு சாற்றினை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1/2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். * பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். * அடுத்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். * இப்படி ஒருநாள் விட்டு ஒரு நாள் பயப்டுத்தி வர சரும நிறத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம். ஃபேஸ் மாஸ்க் #3 * இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் உருளைக்கிழங்கு சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். * பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். * பிறகு அதை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். * இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வர சருமத்தில் உள்ள கருமை நீங்குவதைக் காணலாம். ஃபேஸ் மாஸ்க் #4 * இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் உருளைக்கிழங்கு மற்றும் ஸ்ட்ராபெர்ரியை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். * பிறகு அதில் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். * பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். * அதன் பின் மென்மையாக தேய்த்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். * இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். ஃபேஸ் மாஸ்க் #5 * இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து, அத்துடன் பாதி உருளைக்கிழங்கின் சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். * பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும். * அதன் பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். * இந்த ஃபேஸ் மாஸ்க் சருமத்தில் உள்ள கருமையைப் போக்குவதோடு, சரும சுருக்கத்தையும் தடுக்கும்.