சற்று முன்னர் வெளியான செய்தி..!

சற்று முன்னர் வெளியான செய்தி..!

ஊரடங்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள நபர்கள் அதனை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரச நிறுவனங்கள்,  கூட்டுத்தாபனங்கள்சபைகள் மற்றும் அத்தியவசிய சேவையில் ஈடுபடுவோர்  உள்ளிட்ட ஊடக நிறுவனங்களில் பணிபுரிவோர் தமது அலுவலக அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 84 நிறுவனங்களுக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளள நிலையில்அதனை தவறாக பயன்படுத்த வேண்டாம் என  பிரதிப் பொலிஸ்மா அதிபரானபொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண கேட்டுக் கொண்டுள்ளார்.

எனினும்கடமைகளுக்கு செல்வதற்கு மாத்திரமே அதனைப் பயன்படுத்த வேண்டும் எனவும்தனிப்பட்ட தேவைகளுக்காக அதனைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன்குறித்த நிறுவனங்களில் சாரதிகளாக பணி புரிகின்ற நபர்களுக்குதமது நிறுவனத்தின் தலைவர் அல்லது நிறைவேற்று அதிகாரி ஊடாக உறுதிப்படுத்தல் கடிதமொன்றை வழங்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில்அலுவலக அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தஅனுமதி வழங்கப்பட்டுள்ள நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள்சுற்றறிக்கையின் ஊடாக பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.