குளிர்கால கொரோனா உயிரிழப்பு -அதிர்ச்சியளிக்கும் பிரிட்டன் அரசின் இரகசியஅறிக்கை

குளிர்கால கொரோனா உயிரிழப்பு -அதிர்ச்சியளிக்கும் பிரிட்டன் அரசின் இரகசியஅறிக்கை

திர்வரும் குளிர்காலத்தில் ஏற்படவுள்ள மோசமான சூழ்நிலையில் பிரித்தானியாவில் கொரோனா தொற்று காரணமாக 85,000 பேர் இறப்பார்கள் என அரசாங்க அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட தகவல் கசிந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜூலை மாத இறுதியில் அமைச்சரவை அலுவலகத்திற்கான அவசரநிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழு (SAGE) கையெழுத்திட்டு அரசாங்கத்திடம் சமர்ப்பித்த ஆவணத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் ஜூலை மற்றும் 2021 மார்ச் மாதங்களுக்கு இடையில் கொரோனாவால் 81,000 கூடுதல் இறப்புகள் ஏற்படலாம் என்று இந்த ஆவணத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த அவணத்தில், வீடுகளுக்கிடையேயான தொடர்புகளை கணிசமாகக் குறைக்க நவம்பர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் கட்டுப்பாடுகள் இருக்கக்கூடும் என்றும் கூறுகிறது.

குளிர்கால மாதங்களுக்கு முன்னதாக என்.எச்.எஸ் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் சவக்கிடங்குகள் மற்றும் அடக்கம் சேவைகள் போன்ற சேவைகளைத் திட்டமிட உதவுவதற்காக இது வகுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இதுவரை 3,30,000-க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன, மேலும் 40,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.