மன்னார் காற்றாலை மின் நிலையம் : கடைசித் தொகுதி உபகரணங்களும் வந்து சேர்ந்தன

மன்னார் காற்றாலை மின் நிலையம் : கடைசித் தொகுதி உபகரணங்களும் வந்து சேர்ந்தன

ஏற்கனவே பணிகள் தொடங்கப்பட்ட மன்னார் காற்றாலை மின் நிலையத்திற்குத் தேவையான ரேபன்களின்(turbines) கடைசித் தொகுதி, நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் தொகுதி ரேபன்களை ஏற்றி வந்த கப்பல் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 மெகாவாட் திறன் கொண்ட இந்த காற்றாலை மின் நிலையத்திற்குத் தேவையான ரேபன்களின் முதல் தொகுதி சில வாரங்களுக்கு முன்பு நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது, மேலும் அந்த ரேபன்கள் தற்போது உரிய இடத்தில் நிறுவப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டம் மார்ச் 2027-க்குள் நிறைவடையும் 

இந்தத் திட்டம் மார்ச் 2027-க்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இதன் மூலம் 50 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும்.

மன்னார் காற்றாலை மின் நிலையம் : கடைசித் தொகுதி உபகரணங்களும் வந்து சேர்ந்தன | Turbines Mannar Wind Power Plant Arrived

இந்த ஆலை செயல்பாட்டுக்கு வந்தவுடன், புதைபடிவ எரிபொருள் இறக்குமதி கட்டுப்படுத்தப்படுவதால், நாடு ஆண்டுதோறும் சுமார் 4.7 பில்லியன் ரூபாய் அந்நியச் செலாவணியைச் சேமிக்கும்.

2030-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் தேசிய மின்சாரத் தேவையின் 70 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து உற்பத்தி செய்ய வேண்டும் என்ற தேசிய எரிசக்தி இலக்கை அடைய இந்த ஆலை உதவும். 

இதேவேளை மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்கு எதிராக மன்னார் மக்கள் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.