பங்குச்சந்தை முதலீடுகள் தொடர்பான இணைய மோசடி தொடர்பில் எச்சரிக்கை

பங்குச்சந்தை முதலீடுகள் தொடர்பான இணைய மோசடி தொடர்பில் எச்சரிக்கை

பங்குச்சந்தை முதலீடுகள் தொடர்பான இணைய மோசடி அதிகரித்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் மோசடி நடவடிக்கைகளை தடுக்க இலங்கையின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு (SEC) பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அதன் தலைவர் மூத்த பேராசிரியர் ஹரிந்திர திசாபண்டார கூறியுள்ளார்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பங்கு தரகர்களாக போலியாக காட்டிக்கொள்ளும் நபர்கள் சமூக ஊடகப்பதிவுகள் அல்லது தொலைபேசி அழைப்புகள் மூலம் பொதுமக்களை அணுகுவதாகவும் அவர் விளக்கியுள்ளார்.

பங்குச்சந்தை முதலீடுகள் தொடர்பான இணைய மோசடி தொடர்பில் எச்சரிக்கை | Public Warned Of Rise In Stock Market Fraud

இந்த மோசடி செய்பவர்கள் பங்குச் சந்தை முதலீடுகளை நிலையான வைப்புத்தொகைகளுடன் சாதகமாக ஒப்பிட்டு ஊக்குவிப்பதாகவும், நம்பிக்கை தரும் வகையில் செயற்படுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், பாதிக்கப்பட்டவர்கள் உள்ளூர் வங்கிக் கணக்குகளில் நிதியை வைப்பு செய்ய ஆசைப்படுவதாக கூறப்படுகின்றது. இந்த நோக்கத்திற்காக அவர்கள் ஒரு செயலியையும் பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.