இன்னும் நான்கு நாட்களில் எரிபொருள் மானியம் முடிவடைகிறது! அரசாங்கத்தின் அறிவிப்பு

இன்னும் நான்கு நாட்களில் எரிபொருள் மானியம் முடிவடைகிறது! அரசாங்கத்தின் அறிவிப்பு

உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்திருப்பதைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என நம்புவதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டாக்டர் அனில் ஜெயந்த தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று(26.06.2026)  தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை கூறியுள்ளார்.

மேலும், எரிபொருளுக்காக அரசு தற்போது ரூ. 57 பில்லியன் மானியம் வழங்கி வருவதாகவும், அந்த மானியம் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

பொதுமக்கள் மீது அழுத்தம்

எனவே, பொதுமக்கள் மீது அழுத்தம் கொடுக்கப் போவதில்லை என்பதால், மீண்டும் மானியம் வழங்கப்படலாமா வேண்டாமா என்பது குறித்து கொள்கை முடிவு எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்னும் நான்கு நாட்களில் எரிபொருள் மானியம் முடிவடைகிறது! அரசாங்கத்தின் அறிவிப்பு | Fuel Subsidy Ends In Four Days

இதற்கிடையில், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலைகள் வேகமாக அதிகரித்ததால், அந்த விலைகளை விட நம் நாட்டில் எரிபொருள் விலையைச் சிறிதளவு உயர்த்த அரசாங்கம் நிர்பந்திக்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், அதிகரித்த எரிபொருள் விலைகள் மீண்டும் குறைந்து வருவதாகவும், அந்த விலையில் எரிபொருளை வாங்கும்போது பொதுமக்கள் இதனால் பயனடையலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கையில் கையிருப்பில் உள்ளதும், அடுத்த இரண்டு மாதங்களில் வந்து சேரவிருப்பதுமான எரிபொருளானது, கடந்த மாதம் வாங்கப்பட்ட எரிபொருளே என்பதால், எதிர்காலத்தில் வாங்கப்படும் எரிபொருளுக்கான செலவை ஏற்பதன் மூலம் அதன் பலனை மக்களுக்கு வழங்க முடியும் என்றும் அவர் மேலும் விளக்கியுள்ளார்.

 

இலாபம் ஈட்டும் நிலை

மேலும் கருத்து வெளியிட்ட அவர், 

“நிலைமை இன்னும் போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பவில்லை. உதாரணமாக, நாங்கள் ஒரு பேரல் கச்சா எண்ணெயை 64-65 டொலர் விலையில் வாங்கினோம். அது 125 டொலராக உயர்ந்தது.

இன்னும் நான்கு நாட்களில் எரிபொருள் மானியம் முடிவடைகிறது! அரசாங்கத்தின் அறிவிப்பு | Fuel Subsidy Ends In Four Days

 

அப்போது, ​​விலை இரட்டிப்பாகிவிட்டது என்று கூறி, அதை இருமடங்காக உயர்த்தி இலாபம் ஈட்டும் நிலைக்கு நாங்கள் செல்லவில்லை. நாங்கள் இருக்கும் விலையிலேயே எண்ணெயை வழங்க முயன்றோம்.

விலை உயர்வு கூட விழிப்புணர்வுடனேயே செய்யப்பட்டது. ஆனால் இப்போது, ​​உயர்த்தப்பட்ட விலை 125 டொலரிலிருந்து குறைந்து, 70 டொலர் பகுதியை நெருங்கி வருவதால், அந்த விலைகளில் செலவை ஈடுசெய்யும் அளவுக்கு எண்ணெயைப் பெறுவதன் மூலமே எங்களால் பலனை வழங்க முடியும்” என கூறியுள்ளார்.