மேலும் 326 பேர் நாடு திரும்பினர்...!

மேலும் 326 பேர் நாடு திரும்பினர்...!

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 326 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 6 விமான சேவைகள் மூலம் இவர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். 

இவ்வாறு வருகை தந்தவர்களில் துபாயிலிருந்து 152 பேரும் மாலைதீவிலிருந்து 70 பேரும் அடங்குவர்.

இதேவேளை தொழில் மற்றும் கல்வி நிமித்தம் 425 பேர் நாட்டைவிட்டு வெளியேறியிருப்பதாக தொிவிக்கப்படுகின்றது.