பொலிஸார் பொதுமக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள்
வார இறுதியில் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு அமைவாக செயல்படுமாறு பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறுவோரை கைது செய்வதற்கான நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு அமைய செயல்படாத அரச மற்றும் தனியார் நிறுவனங்களை சேர்ந்த 1,001 பேருக்கு எதிராக தற்பொழுது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதேபோன்று கடந்த 24 மணித்தியாலய காலப்பகுதியில் முகக்கவசம் அணியாத 15 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.