கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருவர் திடீர் உயிரிழப்பு!
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்று இரவு திடீரென உயிரிழந்த இருவர் குறித்து இன்று விசாரணை நடத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தேசிய வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்ட இருவர் திடீரென மரணமடைந்தனர். இவர்களுக்கு கொரோனா தொற்று இருந்ததா அல்லது மரணத்திற்கான காரணம் குறித்த விசாரணை இன்று நடத்தப்படவுள்ளது.
குறிப்பாக இருவரது உடல்களிலிருந்து பெறப்பட்ட விடயங்கள் இன்று பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.