இலங்கையில் இரவு வெளியான தகவல் - ஒரே நாளில் சடுதியாக அதிகரித்த கொரோனா நோயாளர்கள்

இலங்கையில் இரவு வெளியான தகவல் - ஒரே நாளில் சடுதியாக அதிகரித்த கொரோனா நோயாளர்கள்

இலங்கையில் என்றுமில்லாதவாறு நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கிலக்கானவர்கள் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இரவு வெளியான தகவலின்படி 309 கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் தொற்றாளர்களின் எண்ணிக்கை 6287 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி பேலியகொட மீன் சந்தையிலிருந்து 188 பேரும், தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து இருவரும், தொற்றுக்குள்ளான உறவினர்களாக 97 பேரும், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலிருந்து 22 பேரும் தொற்றுக்குள்ளான நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.