ஊரடங்கு அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்வது தொடர்பில் விசேட அதிகாரிகள் நியமனம்!

ஊரடங்கு அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்வது தொடர்பில் விசேட அதிகாரிகள் நியமனம்!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஊரடங்கு அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்வது தொடர்பான செயற்பாடுகளுக்காக விசேட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, களணி பொலிஸ் பிரிவுக்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி MKRA குணரத்னவை 071 859 16 05 எனும் தொலைபேசி இலக்கத்தின் மூலமும், கம்பஹா பொலிஸ் பிரிவுகள் தொடர்பில் உதவி பொலிஸ் அதிகாரி துசிதகுமாரவை 071 859 16 10 எனும் தொலைபேசி இலக்கத்தின் மூலமும் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நீர்கொழும்பு பொலிஸ் பிரிவு தொடர்பில் பொலிஸ் அதிகாரி பாலித அமரதுங்கவை 071 859 16 32 மற்றும் கொழும்பு வடக்கு பொலிஸ் பிரிவு தொடர்பில், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி நிரஞ்சன் அபேவர்தன 071 859 15 74 னும் தொலைபேசி இலக்கத்தின் மூலமும் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அத்தியாவசிய சேவைகளான மருத்துவம், மின்சாரம், நீர், தொடர்பாடல் மற்றும் ஊடகம் ஆகிய துறைகளுக்கு தமது சேவை அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பாவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஏதேனும் தேவைகளுக்காக அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளல், தொழிற்சாலைகளை நடத்தி செல்ல வேண்டியமை, ஆகியவை குறித்து குறித்த பொலிஸ் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், குறித்த காலப்பகுதிக்குள் இடம்பெறும் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கான அனுமதிகள் தொடர்பிலும் குறித்த பொலிஸ் அதிகாரிகளிடம் அறிந்துகொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.