வவுனியாவில் வீதி அபிவிருத்தி மேற்கொள்ளும் பிரபல நிறுவனத்தின் ஊழியர்களுக்கு உறுதியானது கொரோனா!

வவுனியாவில் வீதி அபிவிருத்தி மேற்கொள்ளும் பிரபல நிறுவனத்தின் ஊழியர்களுக்கு உறுதியானது கொரோனா!

வவுனியா வடக்கில் வீதி அபிவிருத்திப்பணிகளில் ஈடுபட்டுவரும் பிரபல நிறுவனத்தை சேர்ந்த மூன்று ஊழியர்களிற்கு கொரோனொ தொற்று இருந்தமை நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெற்கை சேர்ந்த குறித்த ஒப்பந்த நிறுவனம் வவுனியா வடக்கின் பல்வேறு பகுதிகளில் வீதி திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. அங்கு பணியாற்றும் 27 பேருக்கு வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் பி.சி.ஆர் பரிசோதனைகள் நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பரிசோதனை முடிவுகளிற்கமைய தென்பகுதிகளில் இருந்து அண்மையில் அலுவலகத்திற்கு சென்றிருந்த 3 ஊழியர்களிற்கு கோரோனோ தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டது. அத்துடன் அதில் மேலும் இருவரது முடிவுகள் கிடைக்கப்பெறாமல் இருந்த நிலையில் இன்றைய தினம் பரிசோதனை முடிவு வெளியாகியது. அதன்படி அந்த இரண்டு ஊழியர்களிற்கு கொரோனோ தொற்று ஏற்பட்டமை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த நிறுவனத்தை சேர்ந்த 82 ஊழியர்களிற்கு இன்றைய தினம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.