
கொரோனா தொற்றாளர்களுக்காக போதுமான மருத்துவமனை வசதிகள் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு
நாட்டில் கொரோனா தொற்றாளர்களுக்கு போதுமான மருத்துவமனை வசதிகள் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் கொரோனா தொற்றாளர்களுக்காக 14 மருத்துவமனைகள் சிகிச்சை வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.