வீடு புகுந்து திருடிய 14 பேர் கைது...!

வீடு புகுந்து திருடிய 14 பேர் கைது...!

நாட்டின் பல பகுதிகளில் வீடுகளை உடைத்து தங்கம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையிட்ட சம்பவங்கள் தொடர்பில் சிலாபத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 14 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் சிலாபம் மேலதிக நீதவான் அநுர இந்திரஜித் புத்ததாஸ முன்னிலையில் நேற்றைய தினம் பிரசன்னப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிலாபம் குற்றப் புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது மூவாயிரத்து 200 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருளுடன் அவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தவும் நீதிமன்றம் நேற்று அனுமதியளித்துள்ளது.

இந்தநிலையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இதுவரையில் 50 கோடி ரூபா பெறுமதியுடைய தங்கம் மற்றும் பணம் என்பவற்றை அவர் கொள்ளையிட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.