
பிரதமரை சந்தித்த அமைச்சர் காமினி லொக்குகே..!
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் அமைச்சர் காமினி லொக்குகே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பானது நேற்று இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை இந்த ஆணைக்குழுவில் 6952 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் அண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க பிரதமரால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.