நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி....!

நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி....!

நாட்டில் நேற்றைய தினம் 5 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதியாகியுள்ளது

அரசாங்க தகவல் திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

லைபீரியா, ஹொங்கொங், பஹ்ரைன், இந்தியா ஒமான் ஆகிய நாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களுக்கே இவ்வாறு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்தம் எண்ணிக்கை 3 ஆயிரத்து 281 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொவிட் 19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 17 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றினால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 60 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம், 208 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.