இணையத்தில் மோசடி..! பொது மக்களே அவதானம்

இணையத்தில் மோசடி..! பொது மக்களே அவதானம்

இணையத்தளம் வழியாக பறவைகளை விற்பனை செய்து வந்த ஒருவரை வனஜீவராசிகள் திணைக்களத்தின் அவசர தேடுதல் பிரிவின் அதிகாரிகள், மாத்தளையில் நேற்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 6 கிளிகள், 6 கிளிக் குஞ்சிகள், மைனா, 3 மைனா குஞ்சிகள், 6 சிறிய இன கிளிகளை தாம் கைப்பற்றியதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு விலங்கியல் ஆர்வலர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய இந்த நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் இன்று மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.