ஆறு மாதக் குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்!

ஆறு மாதக் குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்!

பாலாவி பகுதியிலிருந்து புத்தளம் நோக்கி பயணித்த காருடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதால் ஆறு மாதக் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று பிற்பகல் புத்தளம் கொழும்பு முகத்திடலிற்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த, மதுரங்குளி - கனமுல்லை பகுதியைச் சேர்ந்த, 6 மாதக் குழந்தை உயிரிழந்துள்ளதுடன், இருவர் படு காயங்களுக்குள்ளாகியுள்ள நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

காரின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடுன் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.