வேதன அதிகரிப்பிற்கு அழுத்தம் கொடுக்கப்படும்..!

வேதன அதிகரிப்பிற்கு அழுத்தம் கொடுக்கப்படும்..!

பெருந்தோட்ட மக்களுக்கான வேதன அதிகரிப்பு விடயத்தில் தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணியில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட செயலாளர் நாயகம் பேராசிரியர் விஜயசந்திரன், பிரதித்தலைவர் எல்.லோரன்ஸ், நிதிச்செயலாளர் கிருஸ்ணன் உள்ளிட்டவர்கள் பதவியேற்கும் நிகழ்வு இன்று ஹட்டனில் உள்ள கட்சியின் பிரதான அலுவலகத்தில் இடம்பெற்றது.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.