தென்னிலங்கையில் சற்று முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு ஏற்பட்ட அசம்பாவிதம்!
பன்னிபிட்டி பகுதியிலுள்ள பிரபல பாடசாலையில் 8 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 16 மாணவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக சற்று முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
16 மாணவர்களும் தற்பொழுது ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாணவர்கள் ரெட்பார்ம் என கூறப்படும் ஒருவகை காயைப் பறித்து விளையாடிக்கொண்டிருக்கும் போது காய் உடம்பில் பட்டதை தொடர்ந்தே அவர்கள் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.