பிறந்த நாள் வைபவம் எனக்கூறி 5 பெண்கள் உள்ளிட்ட 19 பேர் செய்த காரியம்..!

பிறந்த நாள் வைபவம் எனக்கூறி 5 பெண்கள் உள்ளிட்ட 19 பேர் செய்த காரியம்..!

பிலியந்தலை - தம்பே விடுமுறை விடுதியில் பிறந்தநாள் வைபவம் என தெரிவித்து இடம்பெற்ற போதை பொருள் களியாட்ட நிகழ்வில் பங்கேற்றிருந்த ஐந்து யுவதிகள் உள்ளிட்ட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கலால் வரி திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஐஸ், கஞ்சா, மற்றும் போதை குளிசைகள் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் கெஸ்பேவ நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் அவர்களுக்கு 160,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது