கொரோனாவில் இருந்து மீண்டார் ராஜமௌலி

கொரோனாவில் இருந்து மீண்டார் ராஜமௌலி

பாகுபலி, நான் ஈ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியதன் மூலம் உலகளவில் பிரபலமடைந்தவர் இயக்குனர் ராஜமௌலி.

இவர் தற்போது ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடிக்கும் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ படத்தை இயக்கி வருகிறார்.

இந்தியாவில் கொரானா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராஜமௌலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கடந்த ஜூலை 29 ஆம் திகதி கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து இயக்குனர் ராஜமௌலி தனது குடும்பத்தினருடன் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இதனை தொடர்ந்து 14 நாட்கள் சிகிச்சைக்கு பின் மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு தொற்று இல்லை என உறுதியானது.