யாழ் அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் திடீர் தீ பரவல்!

யாழ் அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் திடீர் தீ பரவல்!

யாழ்ப்பாணம் அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் நேற்று (21-08-2026) இடம்பெற்றுள்ளது.

தரிசு நிலமாக காணப்படும் பல ஏக்கர் புற்களைக் கொண்ட சமவெளியில் ஏற்பட்ட தீயில் பல ஏக்கர் நிலத்தில் தீ பரவியது.

 

தீயணைப்பு படையினர்

அருகில் உள்ள வீடுகள் மற்றும் வயல் நிலங்கள் பகுதிளவில் பாதிப்படைந்தன.

இதையடுத்து யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்பு படையினரின் பல மணி நேர போராட்டத்தின் பின்னர் தீயினைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.