அஹங்கமவில் பயங்கரம்: மதில் இடிந்து விழுந்து மூவர் பலி

அஹங்கமவில் பயங்கரம்: மதில் இடிந்து விழுந்து மூவர் பலி

மதில் இடிந்து விழுந்ததில் அதன் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று மாலை அஹங்கம - பெலஸ்ஸ பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

வேலைத்தளம் ஒன்றில் மதில் ஒன்றை நிர்மாணித்துக் கொண்டிருந்த மூன்று தொழிலாளர்களே இவ்வாறு இடிபாடுகளுக்குள் இன்று மாலை சிக்கியிருந்தனர்.

அஹங்கமவில் பயங்கரம்: மதில் இடிந்து விழுந்து மூவர் பலி | Terror In Ahangama Three Killed As Wall Collapses

மதில் சுவருக்கு அடியில் சிக்கியிருந்த மூவரும் நீண்ட நேர மீட்பு பணிகளின் பின்னர் சிகிச்சைக்காக கொன்னகஹேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் குறித்த மூவரும் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.