யாழ்ப்பாணத்தில் சோகம்: தவறான முடிவெடுத்து இளம் நாதஸ்வர வித்துவான் மரணம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: தவறான முடிவெடுத்து இளம் நாதஸ்வர வித்துவான் மரணம்

யாழ்ப்பாணத்தில் நாதஸ்வர வித்துவான் ஒருவர் தவறான முடிவெடுத்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கோண்டாவில் காளி கோவிலடி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விசாரணை

குறித்த பகுதியை சேர்ந்த கோவிந்தராசா ஜனுசன் (வயது 32) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.