
காவற்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி
பொதுத்தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக 82 ஆயிரத்து 91 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காவற்துறை தலைமையகம் இதனை தெரிவித்துள்ளது.
அத்துடன் காவல்துறை விஷேட அதிரடிப்படையினரும் சிவில் பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்த தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கு தேவையான அதிகாரத்தை பயன்படுத்துவதற்கான ஆலோசனை காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சருமான ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.