இலங்கையில் மற்றுமொரு விலை அதிகரிப்பு

இலங்கையில் மற்றுமொரு விலை அதிகரிப்பு

சந்தையில் கோழி இறைச்சியின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஸ்டியன் மாவத்தை கோழி வியாபாரிகள் சங்கத் தலைவர், எம்.ஐ.எம். இக்பால் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, சந்தையில் நேற்று (15) கோழி இறைச்சி ஒரு கிலோ ரூபா 1,400 ஆக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மற்றுமொரு விலை அதிகரிப்பு | The Price Of Chicken Has Increased Againசந்தையில் ஏற்பட்ட சமீபத்திய ஏற்ற, இறக்கங்களைத் தொடர்ந்து இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

இதன்படி முட்டையொன்றின் விலை 35 முதல் 40 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.