பொதுத்தேர்தல் காலப்பகுதியில் அனர்த்த நிலையை எதிர்கொள்ள விசேட பிரிவு!

பொதுத்தேர்தல் காலப்பகுதியில் அனர்த்த நிலையை எதிர்கொள்ள விசேட பிரிவு!

பொதுத் தேர்தலுக்கு அமைவாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் எதிர்வரும் சில தினங்களில் அவசர இடர்நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு 24 மணித்தியாலம் செயற்படக்கூடிய விசேட செயற்பாட்டு பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவுகளை உள்ளடக்கி உடனடியாக செயற்படக்கூடிய விசேட திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

அனர்த்தங்கள் தொடர்பாக இந்த விடேச பிரிவுகளுக்கு அறிவிப்பதற்காக விசேட தொலைபேசி  இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 0702117117, 011-3668031, 011-3668032, 011-3668087, 011-3668016, 011-3668025 இதற்கு மேலதிகமாக துரித தொலைபேசி இலக்கமான 117 என்ற இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.