கனடாவின் ரொரண்டோவில் வீசப்போகும் பிணநாற்றம்

கனடாவின் ரொரண்டோவில் வீசப்போகும் பிணநாற்றம்

பிண நாற்றம் வீசும், corpse flower எனப்படும், பூ டொராண்டோவில் இரண்டாவது முறையாக அடுத்த வாரம் மலரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மலரின் அதிகாரபூர்வ பெயர் இரஃப்லேசியா அர்னால்டி, இது இந்தோனேசியாவை பூர்வீகமாகக் கொண்டது.

எட்டு முதல் 36 மணி நேரம் மட்டுமே இது பூத்திருக்கும். அது பூக்கும் போது, ​​ மகரந்தச் சேர்க்கைக்காக ஈக்கள் மற்றும் வண்டுகளை ஈர்க்கும் பொருட்டு அழுகிய இறைச்சியைப் போன்ற மோசமான வாசனையை உருவாக்குகிறது.

இந்த பூ ஏழு முதல் 10 ஆண்டுகள் வரை ஆகும், டொராண்டோ உயிரியல் பூங்காவில் இந்த மலர் செடி 2018 செப்ரெம்பர் நடப்பட்டது. இந்த மலர் இரண்டாவது முறையாக பூக்க பல ஆண்டுகள் ஆகலாம். எனினும், அடுத்த வாரம் இந்த பிண நாற்றம் வீசும் மலர் மீண்டும் பூக்கவிருப்பதாக டொரண்டோ உயிரியல் பூங்கா அறிவித்துள்ளது.

இதன் தற்போதைய வளர்ச்சியின் அடிப்படையில், அடுத்த புதன்கிழமை பூக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். எவ்வாறாயினும், அமோர்போஃபாலஸ் டைட்டனம் கணிக்க முடியாதது. எதுவும் நடக்கலாம். ” என்றும் டொராண்டோ உயிரியல் பூங்கா அதிகாரிகள் கூறியுள்ளனர்.