பாதுகாப்பான மற்றும் ஒழுக்கமான தேசம் உருவாக்கப்பட்டுள்ளது – டலஸ்

பாதுகாப்பான மற்றும் ஒழுக்கமான தேசம் உருவாக்கப்பட்டுள்ளது – டலஸ்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பாதுகாப்பானதும் ஒழுக்கமான தேசம் உருவாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

வெலிகம பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதியின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லக்கூடிய பொருத்தமான நாடாளுமன்றத்தை பொதுமக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என கூறினார்.

தற்போது நாடு மாறிக்கொண்டிருக்கிறது, நாட்டில் பாதாள உலக கும்பலுக்கு எவரும் பயப்படவில்லை. அத்தடு தங்களது பிள்ளைகள் போதைப்பொருள் மோசடிகளுக்கு இரையாகிவிடுவார்களா என்ற அச்சத்தில் பெற்றோர்கள் உள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையின் கீழ், பாதாள உலகக் கும்பல் தலையை உயர்த்த மாட்டார்கள் என்றும் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

மேலும் நாட்டில் மாற்றத்தை உருவாக்க விரும்பும் அரச தலைவருக்கு பொருத்தமான நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு உள்ளது என்றும் டலஸ் அழகப்பெரும சுட்டிக்காட்டினார்