வௌிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் பாரிய மோசடி அம்பலம்

வௌிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் பாரிய மோசடி அம்பலம்

வௌிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் சிலர் இலங்கையின் வங்கிகளில் விநியோகிக்கப்படும் டெபிட் கார்ட்களை (Debit Card) பயன்படுத்தி பாரிய மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து இடம்பெற்ற விசாரணைகளில் இவ்விடயம் வெளிவந்துள்ளது,

டெபிட் கார்ட்களுக்காக குறித்த நிறுவனங்களால் வழங்கப்பட்ட சலுகைப் பணம் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்மூலம் நாட்டிலுள்ள வங்கிகளுக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விசாரணைக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும் இந்த மோசடி குறித்த ஆரம்பத்தில் தெரியவந்துள்ளதால், அதனை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க முடிந்ததாகவும் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.