தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகம் சாவகச்சேரியில் திறப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகம் சாவகச்சேரியில் திறப்பு

யாழ்ப்பாணம்- சாவகச்சேரி நகரிலுள்ள பருத்தித்துறை வீதியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் செயற்பாட்டுக்கான அலுவலகம்  இன்று (திங்கட்கிழமை) திறந்து வைக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரும், தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசாவினால் குறித்த  அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் சசிகலா ரவிராஜ், சாவகச்சேரி நகராட்சி மன்ற தவிசாளர் சிவமங்கை இராமநாதன், உப தவிசாளர் அ.பாலமயூரன், கட்சியின் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.