உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

உருக்குலைந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆண் ஒருவரின் சடலம் ஒன்றை மீட்டுள்ளதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழைய பாலம் தெற்கு கடற்கரையில் இன்று காலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

இன்று காலை தலைமன்னார் கடற்கரை பகுதியில் கடற்படையினர் றோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கடற்கரையில் சடலத்தை அவதானித்துள்ளனர்.

கடற்படையினர் உடனடியாக தலைமன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து பொலிஸார் குறித்த பகுதிக்குச் சென்று சடலத்தை பார்வையிட்டு விசாரனைகளை முன்னெடுத்ததோடு, மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றனர்.

குறித்த சடலம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.