
இலங்கையில் நேற்று கொரோனா உறுதியானவர் தொடர்பில் வெளிவந்த தகவல்
நாட்டில் நேற்றைய தினம் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
கந்தகாடு போதைப்பொருள் புனர்வாழ்வு முகாமில் தொற்றுறுதியானவருடன் தொடர்பினை பேணிய 3 பேருக்கும், சேனப்புர புனர்வாழ்வு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறதியாகியுள்ளது.
அத்துடன் கட்டாரில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலில் ஈடுப்பட்டிருந்த நான்கு பேருக்கும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுதியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 782 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றில் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 3 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 106 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 665 பேர் நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.