கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 106 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் மூவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதேநேரம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2770 ஆக பதிவாகியுள்ளது.

அவர்களில், 2 ஆயிரத்து 106 பேர் குணமடைந்துள்ள நிலையில்,  இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட 653 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அத்துடன், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.