இராணுவ வீரர்கள் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் – இராணுவத்தளபதி தெரிவிப்பு
நாட்டின் அனைத்து இராணுவ வீரர்களும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டுமென இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
குருவிட்ட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டு மக்களை பாதுகாப்பது இராணுவத்தின் பொறுப்பு எனவும் அவர் மேலும் குறுப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், பொது மக்களை பாதுகாப்பதற்கு இராணுவத்தினர் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமென இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.