கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெறும் வைத்தியசாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிப்பு

கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெறும் வைத்தியசாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் சிகிச்சைப்பெற்றுவரும் வைத்தியசாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேசிய தொற்று  நோய் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த நோயாளர் ஒருவர்  நேற்று  அதிகாலை தப்பிச்சென்ற நிலையில்  குறித்த நபர் பாதுகாப்பான முறையில்  கண்டுபிடிக்கப்பட்டதாக ராணுவத்தளபதி  ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரட்ன இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை வைத்தியசாலைகளில் இருந்து நோயாளர்கள்  தன்னிச்சையாக வெளியேறும் சம்பவங்களை  தடுப்பதற்கான  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.