அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு பல்வேறு சலுகைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல்ல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை அனைத்து அரச ஊழியர்களினதும் சம்பளம் தொடர்பான பிரச்சினைகள் தேசிய சம்பள ஆணைக்குழுவின் மூலம் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைகள் தொடர்பில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பெசிய அவர்,

அனைத்து அரச ஊழியர்களுக்கும் நன்மைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதுடன், ஓய்வூதியம் பெறுவோருக்கும் சலுகை வழங்கும் அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கு மேலதிகமாக அரச ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெறுவோருக்கும் அரச வைத்தியசாலைகளில் புதிய தொகுதி ஒன்றை நிர்மாணிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.