கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் வெற்றியடைந்துள்ளது- சவேந்திர சில்வா

கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் வெற்றியடைந்துள்ளது- சவேந்திர சில்வா

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் வெற்றியளித்துள்ளதென இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக  கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,“கொரோனாவை கட்டுப்படுத்துவற்கு அரசாங்கம் சிறந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தது.

இவ்வாறு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து வேலைத்திட்டங்களும் தற்போது வெற்றியளித்துள்ளன.

இதேவேளை  அயல் நாடுகளிலிருந்து எவரும், கடல் வழி  ஊடாக இலங்கைக்குள் நுழைவதற்கான வாய்ப்புக்கள்  வழங்கப்படவில்லை.

மாறாக அவ்வாறு வருவோரை தடுப்பதற்கு, கடற்படையும் இராணுவமும் இணைந்து விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.