இந்தியாவிடம் பெற்ற கடனை மீளச்செலுத்தல் அட்டவணையை மீளமைத்தல் தொடர்பில் பேச்சு வார்த்தை

இந்தியாவிடம் பெற்ற கடனை மீளச்செலுத்தல் அட்டவணையை மீளமைத்தல் தொடர்பில் பேச்சு வார்த்தை

இந்தியாவிடம் பெற்ற கடனை மீளச்செலுத்தல் அட்டவணையை மீளமைத்தல் தொடர்பில் இலங்கை தொடர்ந்தும் இந்தியாவுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகின்றது.

கொரோனா வைரஸால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவை அடுத்து இது தொடர்பான கோரிக்கை இந்தியாவிடம் விடுக்கப்பட்டு இந்தியாவும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளது.

இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சு அதிகாரிகளும், இலங்கையின் வெளியுறவு அமைச்சு அதிகாரிகளும் இந்த பேச்சு வார்த்தையை நடத்தி வருகின்றனர்.

இந்த பேச்சுவார்த்தை கடந்த 22ஆம் திகதி காணொளி காட்சியின் ஊடாக மேற்கொள்ளப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

இந்த பேச்சு வார்த்தை ஸ்திரமான நிலையில் மேற்கொள்ளப்பட்டதாக உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.