அம்பாறைக்கு விஜயம் செய்த மஹிந்த!

அம்பாறைக்கு விஜயம் செய்த மஹிந்த!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பொதுஜன பெரமுன வேட்பாளர்களை ஆதரிக்கும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் நேற்று மாலை திகாமடுல்ல தேர்தல் மாவட்ட வேட்பாளர் எஸ்.சாந்தலிங்கம் தலைமையில் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதன் போது வருகை தந்த பிரதமர், கல்முனை பொலிஸ் பிரிவில் உள்ள நற்பிட்டிமுனை பொது மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் கூடியிருந்த பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் முன்னிலையில் மஹிந்த ராஜபக்ஸ தமிழில் உரையாற்றியிருந்தார்.

இதன் போது கல்முனை மாநகர சபை உறுப்பினர் றபீக் மாலை அணிவித்து வரவேற்றதுடன் இப்பிரச்சார கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் வேட்பாளருமான விமலவீர திசாநாயக்க மற்றும் வேட்பாளர்களான சாந்தலிங்கம், றிஸ்லி முஸ்தபா, கீர்த்தி ஸ்ரீ விஜயசிங்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.