கந்தகாடு தனிமைப்படுத்தல் முகாமில் கொரோனா நோயளர்களிடையே மோதல்
கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தர்களிடையே குழு மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலின் போது ஐவர் காயமடைந்துள்ளனர் என வெலிக்கந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலையில் அனுமதிக்கப்பட்டவர்களே, இந்த மோதலில் ஈடுபட்டார்கள் என்றும், இவர்கள் கந்தகாடு, சேனபுர ஆகிய மத்திய நிலையங்களில் போதை புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.