பல பகுதிகளில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு

பல பகுதிகளில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு

பத்தரமுல்லை-படபொத நீர்த் தொட்டியின் நீர் குழாயில் ஏற்பட்டுள்ள திருத்தப்பணிகள் காரணமாக பத்தரமுல்லை பகுதியை அண்மித்த பகுதிகளுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

நாளை (23) இரவு 10 மணி தொடக்கம் 8 மணித்தியாலங்களுக்கு குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மற்றுமொரு திருத்தப்பபணிகள் காரணமாக களுத்துறையின் பல பகுதிகளுக்கு நாளை மறுதினம் (24) காலை 8 மணி தொடக்கம் 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் குறித்த சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வாத்துவ, வஸ்கடுவ, பொதுபிடிய, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, கடுகுருந்த, நாகொட, பயாகல, பிலமினாவத்த, போம்புவல மற்றும் மக்கொன ஆகிய பகுதிகளிலும் இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

இதற்கு மேலதிகமாக பேருவளை, களுவாமோதர, மோரகல்ல, அழுத்கம, தர்கா நகர் மற்றும் பெந்தொட்டை ஆகிய பகுதிகளிலும் இவ்வாறு நாளை மறுதினம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.