26 வயது ஆசிரியை குத்திப் படுகொலை..!

26 வயது ஆசிரியை குத்திப் படுகொலை..!

மாத்தறை, ஊருபொக்க - தொலமுல்ல பிரதேசத்தில், ஆசிரியை ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆசிரியை பாடசாலை முடிந்து வீடு சென்று கொண்டிருந்தபோதே கொலைச் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்த ஆசிரியை 26 வயதுடைய ஒருவரென காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கொலைக்கான காரணம் தெரியவராத நிலையில், சந்தேகநபர்களை தேடி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.