மரணத்திற்கு காரணம் மனைவியே... கடிதம் எழுதிவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்…

மரணத்திற்கு காரணம் மனைவியே... கடிதம் எழுதிவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்…

திருகோணமலை நொச்சிக்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர். 

குறித்த சடலத்தை இன்று (25) அதிகாலை மீட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதான ராசதுரை சுதாகரன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப தகராறு காரணமாக மனைவி தனது பிள்ளையுடன் மட்டக்களப்பில் வாழ்ந்து வந்துள்ளதாகவும் தொலைபேசியில் இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்த நிலையில் குறித்த இளைஞர் தூக்கில் தொங்கி இருக்கலாம் எனவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

இருந்த போதிலும் குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த மரணத்திற்கான காரணத்தை உயிரிழந்த நபரின் இடத்தில் எழுதி வைத்துள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Gallery