பாடசாலை மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்து: 15 பேர் காயம்

பாடசாலை மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்து: 15 பேர் காயம்

வலஸ்முல்ல  - ஹந்துகல பகுதியில் ஹிங்குருவத்த பாலத்திற்கு அருகில் பாடசாலை மாணவர்கள் பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் குறித்த பேருந்தில் பயணித்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த மாணவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.