சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்ப காலம் மேலும் நீடிப்பு

சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்ப காலம் மேலும் நீடிப்பு

2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்ப காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த விண்ணக்காலம் எதிர்வரும் 10 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தது.

இந்நிலையில், விண்ணப்பதாரிகளின் நலன் கருதி எதிர்வரும் 17ஆம் திகதி வரை குறித்த விண்ணப்ப திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.