தொடருந்து - முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் பலி

தொடருந்து - முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் பலி

காலி - பூஸ்ஸ பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்று தொடருந்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த முச்சக்கர வண்டி வெல்லபட தொடருந்து கடவையை கடக்க முயன்றபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.