மக்கள் பொறுப்புடன் செயற்பட்டால் கொவிட் பரவலை கட்டுப்படுத்த முடியும்!

மக்கள் பொறுப்புடன் செயற்பட்டால் கொவிட் பரவலை கட்டுப்படுத்த முடியும்!

பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட்டால், கொவிட் பரவல் நிலையைக் கட்டுப்படுத்த முடியும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

தற்போதைய சுதந்திரமான சூழலை பொதுமக்கள் அனுபவிக்கின்ற அதேநேரம், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மூன்றாம் தடுப்பூசியாக பைஸர் செயலூக்கி தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

அதனைப் பொதுமக்கள் செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.