வாழைத்தோட்டம் பகுதியில் நபர் ஒருவர் வெட்டிக்கொலை

வாழைத்தோட்டம் பகுதியில் நபர் ஒருவர் வெட்டிக்கொலை

வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய யோன் வீதியில் நேற்று (04) இரவு 11 மணியளவில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் மொஹமட் காமில் மொஹமட் பவாஸ் என பொலிஸார் தெரிவித்தனர்.

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவர் கெசல்வத்த தினுகவின் உதவியாளர்களே இந்தக் கொலையை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.